“எல்லாம் நீ இடம் கொடுத்துதான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு, பார்த்தியா?”
“அப்படிலாம் இல்லை”
“என்ன இல்லை? முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்?”
“அவன் எங்கே சுத்துனான்? ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே?”
“ஃப்ரெண்ட்தான், ஆனா தினம் இங்கே உன்னை விட்டு தனியா எங்கேயாவது போயிருக்கானா? போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா?”
“இப்ப மட்டும் என்ன? போனை எடுக்காமயா இருக்கான்?”
“எடுக்குறான், எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வச்சுடறானே, ஏன்டி இப்படி இருக்க? அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்…! – குறள்கதை”